கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் மூடா கட்சி வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா.சிவபிரகாஷ், கோலகுபு பாரு மக்களின் நலனை முன்நிறுத்தி 5 அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தம்மை மக்கள் தேர்வு செய்வார்களேயானால் கோலகுபு பாரு, உயர் தரமான வருமானத்தை தரவல்ல அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு பகுதியாக முன்னேடுக்கப்படும் என்று டாக்டர் சிவபிரகாஷ் தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் சுற்றுலா தொழில்துறை, இளையோர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குல், ஒவ்வொரு சமயத்தவரும் அவரவர் சார்ந்த சமய நடவடிக்கைகளுக்கு அதீத முன்னுரிமை அளிக்கும் வகையில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருதல், தரமான கல்வியை உறுதி செய்தல் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து அம்ச கொள்கை அறிக்கையை கோலகுபு பாரு மூடா கட்சி வேட்பாளரும், ஒரு கல்விமானுமாகிய டாக்டர் சிவபிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


