கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் மூடா கட்சி வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவர் டாக்டர் ரா.சிவபிரகாஷ், கோலகுபு பாரு மக்களின் நலனை முன்நிறுத்தி 5 அம்சங்களை உள்ளடக்கிய தேர்தல் கொள்கை அறிக்கையை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக தம்மை மக்கள் தேர்வு செய்வார்களேயானால் கோலகுபு பாரு, உயர் தரமான வருமானத்தை தரவல்ல அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய ஒரு பகுதியாக முன்னேடுக்கப்படும் என்று டாக்டர் சிவபிரகாஷ் தமது தேர்தல் கொள்கை அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
சுற்றுச்சூழல் சுற்றுலா தொழில்துறை, இளையோர்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குல், ஒவ்வொரு சமயத்தவரும் அவரவர் சார்ந்த சமய நடவடிக்கைகளுக்கு அதீத முன்னுரிமை அளிக்கும் வகையில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி தருதல், தரமான கல்வியை உறுதி செய்தல் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை வளப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து அம்ச கொள்கை அறிக்கையை கோலகுபு பாரு மூடா கட்சி வேட்பாளரும், ஒரு கல்விமானுமாகிய டாக்டர் சிவபிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


