சிரம்பான், ஆகஸ்ட்.01-
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீதி மற்றும் மரபுத் தலைவர்கள் பேரவையான DKU, Tuanku Muhriz Tuanku Munawir-ஐ Yang di-Pertuan Besar பதவியில் இருந்து நீக்கியதாக அறிவித்த நான்கு Undang-களில் மூவர், அப்போது சட்டபூர்வமான Undang-களாக இல்லை என்று அறிவித்துள்ளது.
இது குறித்து DKU இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Maarof Mat Rashad கடந்த 2023-ஆம் ஆண்டு மே 31 -ஆம் தேதி முதல் adat விதிமீறல்களால் Jelebu Undang பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், Mubarak Dohak கடந்த 2026-ஆம் ஆண்டு, ஏப்ரல் 17-ஆம் தேதி Sungai Ujong Undang பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், Abdul Rahim Yasin, Rembau Undang பதவிக்கு adat மரபுப்படி முறையாக நியமிக்கப்படாததால், அவர் அந்தப் பதவியைச் சட்டபூர்வமாக ஒருபோதும் வகிக்கவில்லை என்றும் DKU தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் 19 -ஆம் தேதி, Tuanku Muhriz-ஐ பதவியில் இருந்து நீக்கியதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு மாநில அரசியலமைப்பின் பிரிவு 10-க்கு முரணானது என்பதால் அது செல்லுபடியாகாது என்றும், மேற்கண்ட மூவருக்கும் அந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்த சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் DKU வலியுறுத்தியுள்ளது.
மேலும், Faris Johari மற்றும் Hassan Ab Hamid ஆகியோரின் Sungai Ujong மற்றும் Rembau Undang நியமனங்கள் கடந்த ஜூன் 27-ஆம் தேதி adat மரபுப்படி முறையாக மேற்கொள்ளப்பட்டவை என DKU உறுதிப்படுத்தியுள்ளது.
அதேவேளையில், Sungai Ujong Shahbandar பதவியில் இருந்த Badarudin Abdul Khalid கடந்த ஜூலை 30 -ஆம் தேதி முதல் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால், அந்த Shahbandar பதவி தற்போது காலியாக இருப்பதாகவும், புதிய Shahbandar-ஐ நியமிக்கும் நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








