சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை கேலி செய்யவோ அல்லது குறைவாக மதிப்பீடு செய்யவோ ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்தார். அரச பரிபாலனத்தை எவ்விதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் முயற்சியில் எவ்வித விட்டுக்கொடுக்கும் போக்கும் கடைப்பிடிக்கப்படாது என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முடியாட்சி மற்றும் கூட்டரசு அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்த அல்லது சீண்டிப்பார்க்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டாது என்று பிரதமர் குறிப்பிட்டார். மாமன்னரின் அதிகாரத்துவ பிறந்த தினத்தையொட்டி ஆற்றிய உரையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்

மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் புதிய துறைமுகம் மற்றும் தொழில் பேட்டை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது


