சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை கேலி செய்யவோ அல்லது குறைவாக மதிப்பீடு செய்யவோ ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்தார். அரச பரிபாலனத்தை எவ்விதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் முயற்சியில் எவ்வித விட்டுக்கொடுக்கும் போக்கும் கடைப்பிடிக்கப்படாது என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முடியாட்சி மற்றும் கூட்டரசு அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்த அல்லது சீண்டிப்பார்க்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டாது என்று பிரதமர் குறிப்பிட்டார். மாமன்னரின் அதிகாரத்துவ பிறந்த தினத்தையொட்டி ஆற்றிய உரையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


