சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை கேலி செய்யவோ அல்லது குறைவாக மதிப்பீடு செய்யவோ ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்தார். அரச பரிபாலனத்தை எவ்விதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் முயற்சியில் எவ்வித விட்டுக்கொடுக்கும் போக்கும் கடைப்பிடிக்கப்படாது என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முடியாட்சி மற்றும் கூட்டரசு அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்த அல்லது சீண்டிப்பார்க்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டாது என்று பிரதமர் குறிப்பிட்டார். மாமன்னரின் அதிகாரத்துவ பிறந்த தினத்தையொட்டி ஆற்றிய உரையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு


