சுதந்திரம் என்ற பெயரில் மன்னராட்சியை கேலி செய்யவோ அல்லது குறைவாக மதிப்பீடு செய்யவோ ஒரு போதும் அனுமதிக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்தார். அரச பரிபாலனத்தை எவ்விதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் பாதுகாக்கும் அரசாங்கத்தின் முயற்சியில் எவ்வித விட்டுக்கொடுக்கும் போக்கும் கடைப்பிடிக்கப்படாது என்று பிரதமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
முடியாட்சி மற்றும் கூட்டரசு அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டை அச்சுறுத்த அல்லது சீண்டிப்பார்க்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் தயக்கம் காட்டாது என்று பிரதமர் குறிப்பிட்டார். மாமன்னரின் அதிகாரத்துவ பிறந்த தினத்தையொட்டி ஆற்றிய உரையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
