Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்
அரசியல்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

Share:

கோலாலம்பூர், மார்ச்.10-

பெர்சத்து கட்சியின் மகளிர் பிரிவு தலைவரான மாஸ் எர்மியாத்தி சம்சுடின், கட்சியின் அரசியலமைப்பு மற்றும் ஒழுக்க விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரண்டு தேர்தல் காலங்களுக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தனது Instagram கணக்கில் இடைநீக்க அறிவிப்பை பகிர்ந்துள்ள மாஸ் எர்மியாத்தி, கட்சியின் அரசியலமைப்பு, பிரிவு 9.1.4 மற்றும் உறுப்பினர்களுக்கான ஒழுக்கம் மற்றும் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் தாம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ரோனால்ட் கியாண்டியும் , இரண்டு தேர்தல் காலங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த இரு இடைநீக்கமும் உடனடியாக அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்:  சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்: சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து