புனித Quran மீது கால்வைத்து அவமதிக்கப்பது மற்றும் அதில் அருவருப்பான வகையில் படங்கள் வரையப்பட்டது போலான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவது குறித்து Sabah மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்தவுள்ளது.
இஸ்லாமை அவமதிக்கும் எந்தச் செயலையும் எவ்வித சமரசமுமின்றி, அதிகாரிகள் கடுமையாக எதிர்கொள்வார்கள் என்று சபா மாநில ஊராட்சி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சரும், சமய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ ஹாஜி முகமது அரிபின் முகமது அரிப் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது இஸ்லாமை மிகவும் இழிவுப்படுத்தக் கூடியதாகவும், தீவிரமானதாகவும் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்செயலை புரிந்தவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகமது அரிபின் தெரிவித்துள்ளார்.








