Apr 22, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை சீரமைக்கப்படாது, பதவி விலகுவது தடுக்கப்படாது:  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்
அரசியல்

அமைச்சரவை சீரமைக்கப்படாது, பதவி விலகுவது தடுக்கப்படாது: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், மே.22-

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தல் முடிவை மையமாகக் கொண்டு, அமைச்சரவை சீரமைக்கப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் அமைச்சரவையிலிருந்து யாரும் பதவி விலகினால் தடுக்கப்படாது என்று பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

பிகேஆர் கட்சித் தேர்தல் என்பது கட்சிக்குள் நடைபெறும் போட்டியாகும். இந்தப் போட்டிக்கும், அமைச்சரவை சீரமைப்புக்கும் தொடர்பு இல்லை என்பதை டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.

கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் என்பதும், முக்கியப் பதவிகளுக் போட்டி என்பதும், கட்சியை வலுப்படுத்துவதற்கும், அனைத்து பலத்தையும் ஒருங்கிணைப்பதற்கும் நடைபெறும் ஒரு ஜனநாயக நடைமுறையாகும்.

அதே வேளையில் பிகேர் தேர்தல் என்பது சொந்த நண்பர்கள், பால்ய சகாக்கள் மற்றும் தங்களுக்கு அறிமுகமானவர்களுக்கு இடையே நடைபெறும் போட்டியாகும். எனவே இதற்கும், அமைச்சரவைச் சீரமைப்புக்கும் தொடர்பு உள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

மிகப் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் பிகேஆர் கட்சித் துணைத் தலைவர் தேர்தலில் தம்மை எதித்துப் போட்டியிடும் அன்வாரின் புதல்வியும், உதவித் தலைவருமான நூருல் இஸாவிடம் தாம் தோல்விக் காணும் நிலை ஏற்படுமானால், அமைச்சரவையில் தாம் அங்கம் வகித்து வரும் பொருளாதார அமைச்சர் பதவியிருந்து விலகப் போவதாக கட்சியின் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி அறிவித்து இருப்பது தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!