நெகிரி செம்பிலான், ரெப்பா சட்டமன்றத் தொகுதியை 4 ஆவது முறையாக தற்காத்துக் கொள்ள டிஏபி சார்பில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக போட்டியிடும் எஸ்.வீரப்பன், தம்பின் விலேஜ் பகுதியில் நேற்று இரவு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
11 ஆவது நாளாக தம்பின் விலேஜ்யை இலக்காக கொண்டு அப்பகுதியில் உள்ள வணிகர்கள் உட்பட வாக்காளர்களை சந்தித்த வீரப்பன் தமது தேர்தல் கொள்கை அறிக்கையின் உள்ளடக்கத்தை விளக்கியதுடன் தம்மை ஆதரிக்கும்படி அப்பகுதி மக்களை கேட்டுக் கொண்டார்.
நெகிரி மாநிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வீரப்பனின் ரெப்பா தொகுதியின் வெற்றியை உறுதி செய்வதற்கு டிஏபி - யின் பெரும் தலைவரான அந்தோணி லோக், களம் இறங்கி வாக்காளர்களிடம் ஆதரவு கோரினார்.
ரெப்பா தொகுதியில் வீரப்பனுடன் அந்தோணி லோக்கின் வருகை வாக்காளர் மத்தியில் மிகப் பெரிய கவன ஈர்ப்பாக மாறியதுடன் ரெப்பா தொகுதி பிரசாரத்திற்கு வலு சேர்த்தது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


