Oct 29, 2025
Thisaigal NewsYouTube
பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவுகள் மூடப்படவில்லை
அரசியல்

பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவுகள் மூடப்படவில்லை

Share:

கோலாலம்பூர், நவ.5-


எந்தவொரு கட்சியுடனும் அரசியல் ஒத்துழைப்பு கொள்வதற்கான கதவுகளை பாரிசான் நேஷனல் மூடிவிடவில்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அரசியல் ஒத்துழைப்பு கொள்ள விரும்பினால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அந்த ஒத்துழைப்பு என்பது பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலை அடிப்டையாக கொண்டே அமைந்திருக்க வேண்டும் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் தெளிவுப்படுத்தினார்.

அரசியல் ஒத்துழைப்பு என்பது, சபா மாநிலத்தையும் சேர்த்துதான் என்று அவர் கோடிகாட்டியுள்ளார்.

Related News