ஒற்றுமை அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான ஒத்துழைப்பை, பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையான ஒற்றுமை அரசாங்கத்திற்கு கடந்த ஏழு மாத காலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று டாமன்சாரா எம்.பி.யுமான கோபிந்த் சிங் குறிப்பிட்டுள்ளார்.
தம்முடைய தனிப்பட்ட கண்ணோட்டத்தில், இரு கூட்டணிகளும் கொண்டுள்ள ஒத்துழைப்பில் வெற்றி கிட்டியுள்ளது. இதில் பிரச்னை இருப்பதாக தாம் கருதவில்லை என்று டிஏபி க்கு நிதி திரட்டும் நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விளுக்கு கோபிந்த் சிங் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
