Jan 20, 2026
Thisaigal NewsYouTube
இரு கூட்டணிகளின் ஒத்துழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்
அரசியல்

இரு கூட்டணிகளின் ஒத்துழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்

Share:

ஒற்றுமை அரசாங்கத்தில் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பாரிசான் நேஷனலுக்கும் இடையிலான ஒத்துழைப்பை, பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று டிஏபி துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையான ஒற்றுமை அரசாங்கத்திற்கு கடந்த ஏழு மாத காலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று டாமன்சாரா எம்.பி.யுமான கோபிந்த் சிங் குறிப்பிட்டுள்ளார்.
தம்முடைய தனிப்பட்ட கண்ணோட்டத்தில், இரு கூட்டணிகளும் கொண்டுள்ள ஒத்துழைப்பில் வெற்றி கிட்டியுள்ளது. இதில் பிரச்னை இருப்பதாக தாம் கருதவில்லை என்று டிஏபி க்கு நிதி திரட்டும் நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விளுக்கு கோபிந்த் சிங் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

Related News