ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக விவாதிப்பதற்கும், தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கும் தேர்தல் ஆணையமான, நாளை மறுநாள் புதன் கிழமை சிறப்புக்கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
வேட்புமனுத்தாக்கல் தேதி, வாக்களிப்பு தேதி ஆகியவற்றை நிர்ணயிப்பதற்கு எஸ்பிஆர் தலைவர்தான் ஶ்ரீ அப்துல் கானி சாலெஹ் தலைமையில் சிறப்புக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோ இக்மைருடின் இஷாக் தெரிவித்தார்.
கெடா, பினாங்கு, கிளந்தான், திரெங்கானு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களில் தேர்தல் நடத்தப்படும் முறை குறித்தும் இந்த சிறப்புக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று இக்மைருடின் இஷாக் குறிப்பிட்டார். இந்த சிறப்புக்கூட்டத்திற்கு பின்னர் அன்றைய தினம் நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் வாக்களிப்பு தேதி, வேட்புமனுத்தாக்கல் தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று இக்மைருடின் இஷாக் தெரிவித்தார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


