சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்து இருக்கும் மஇகா மற்றும் மசீச. விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அம்னோ எடுத்துக்கொள்ளும் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கும், மசீச.விற்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால், அவை போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. அவை போட்டியிடுவதற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தாங்கள் எடுத்துக்கொள்ளப் போவதாக அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் உத்துசான் மலேசியா நாளிதழுக்கு வழங்கியப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மஇகாவையும், மசீச.வையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்குவீர்களா? என்று ஜாஹிட்டிடம் கேட்ட போது, நடைபெறக்கூடிய பாரிசான் நேஷனல் உச்சமன்றக்கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்படும் என்று மட்டுமே பதில் அளித்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


