எந்தவொரு சட்டமன்றத் தேர்தலிலும் தாம் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று அறிவித்துள்ளார்.
தற்போதைய தமது முழு கவனம், மலாய்க்காரர்களின் நலனை கவனிக்கக்கூடிய மலாய் பிரகடனம் பற்றிதான். இந்த நாட்டில் மலாய்க்காரரகளின் உரிமைகள் மற்றம் அவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களை நிலைநிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடப் போவதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.
நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதற்காக மலாய் பிரகடனத்தை தாம் கையில் எடுக்கவில்லை என்றும், ஒட்டுமொத்த மலாய் சமூகத்தின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அந்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளதாகவும் 97 வயதான துன் மகாதீர் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
