Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பத்துமலையில் நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து ஒன்று கூடுவர்
அரசியல்

பத்துமலையில் நஜீப்பிற்கு ஆதரவு தெரிவித்து ஒன்று கூடுவர்

Share:

கோலாலம்பூர், ஜன.4-


வரும் ஜனவரி 6 ஆம் தேதி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணியில் கலந்து கொள்வதற்கு பதிலாக மஇகா உறுப்பினர்கள், பத்துமலைத்திருத்தலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பிரார்த்தனையில் பங்கேற்பர் என்று கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அறிவித்துள்ளார்.

நஜீப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் இந்த சிறப்பு பிரார்த்தனைக்கூட்டம் வரும் ஜனவரி 6 ஆம் தேதி காலை 11 மணியளவில் பத்துமலைத் திருத்தலத்தில் மஇகா ஏற்பாட்டில் நடைபெறவிருப்பதாக டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

Related News