ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை முழுமையாக ஆதரித்து வெற்றி பெறச்செய்யுமாறு மஇகா முன்னாள் உதவித் தலைவர் டான்ஸ்ரீ க.குமரன், வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். பக்காத்தான் ஹராப்பானின் நம்பிக்கை நட்சத்திரமாக டத்தோஸ்ரீ அன்வார் விளங்குகிறார். அவரின் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் மாநிலத் தேர்தல்களில் வெற்றியைத் தேடித்தரும் என்ற நம்பிக்கையுடன் அக்கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் புறநகர் மேம்பாட்டுத்துணை துணை அமைச்சருமான டான்ஸ்ரீ குரமன் கோரிக்கை விடுத்துள்ளார். அலைகள், அனல்கள்,எரிமலைக்குழம்புகள், நிலநடுக்கத்தைக் காட்டி, அச்சமூட்டி மிரட்டி, வாக்கு சேர்க்கும் போக்கு பத்தாம் பசலித்தனமானது. அதற்கு இந்திய வாக்காளர்கள் பலிகடாவாகி விடக்கூடாது என்று மூத்த அரசியல்வாதியும், பேரா மாநில முன்னாள் மஇகா தலைவருமான டான்ஸ்ரீ குமரன் ஊடகத்திற்கு எழுதிய செய்தியில் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


