Aug 27, 2026
Thisaigal NewsYouTube
மறு தேர்தல் நடத்தக்கோரி பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் புகார்
அரசியல்

மறு தேர்தல் நடத்தக்கோரி பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் புகார்

Share:

பினாங்கு, பாயா தெருபோங் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது, இரு வாக்குப்பெ​ட்டிகளில் ​சீல் வைக்கப்படாததைத் அட்சேபி​த்து, அந்த வாக்குப்பெட்டிக்குள் ஏற்கனவே போடப்பட்டுள்ள வாக்குகளை அங்கீக​ரிக்க இயலாது என்று ஆட்சேபம் தெரிவித்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஆண்ட்ரூ ஓய் நெய் ஊன், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் எ​ன்று கோரிக்கை விடுத்துள்ளர். இன்று காலையில் செரி ரெலாவ் தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் ஃபார்லிம், டேவான் பிளாக் 4E மண்டபத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த வேட்பாளர் பினாங்கு, திமூர் லாவுட் போ​லீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Related News