Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

DAP தலைவர்களுக்கு 8 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தினார் சித்தி மஸ்தூரா

Share:

கோலாலம்பூர், ஜன.23-

அவதூறு வழக்கில் தோல்விக்கண்ட பாஸ் கட்சியைச் சேர்ந்த கெப்பாளா பாத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தி மஸ்தூரா, டி.எ.பியின் மூன்று முன்னணி தலைவர்களுக்கு வழங்க வேண்டிய 8 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் இழுப்பீட்டுத் தொகையை செலுத்தி விட்டார்.

இந்த இழப்பீட்டுத் தொகை, DAP மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், முன்னாள் நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக் ஆகியோரை பிரதிநிதிக்கும் எஸ்.என் நாயர் அண்ட் பார்ட்னர்ஸ் வழக்கறிஞர் நிறுவனத்தின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த அவதூறு வழக்கில் DAP- யின் மூன்று தலைவர்களுக்கு கிடைத்த வெற்றியை எதிர்த்து, அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறை செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் வரையில் அந்தப் பணம், வழக்கறிஞர் நிறுவனத்தின் வங்கி கணக்கிலேயே வரவு வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த பெண் எம்.பி.யின் வழக்கறிஞர் யுஸ்பாரிசான் யூசோப் தெரிவித்தார்.

லிம் கிட் சியாங், லிம் குவான் எங் மற்றும் திரேசா கொக் ஆகியோர் தடை செய்யப்பட்ட மலாயா முன்னாள் கம்யூனிஸ்டுத் தலைவர் சின் பெங்கின் உறவினர்கள் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது சித்தி மஸ்தூரா, பகிரங்கமாக குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அந்த மூன்று DAP தலைவர்களும் அந்த பாஸ் எம்.பி.க்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்து வெற்றி பெற்றனர்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு