Dec 21, 2025
Thisaigal NewsYouTube
முதன்மைப் பதவிகளுக்கு போட்டியில்லை; பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி
அரசியல்

முதன்மைப் பதவிகளுக்கு போட்டியில்லை; பெர்சாத்து உச்சமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18-

வருகின்ற அக்டோபரில் நடைபெறவிருக்கும் கட்சி தேர்தலில் முதன்மை பதவிகளுக்கு போட்டியில்லை என பெர்சத்து கட்சியின் தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவால், சில உச்சமன்ற உறுப்பினர்களும் தொகுதி தலைவர்களும் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

அந்நிலைப்பாடு, நடப்பு துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ அகமது பைசல் அசுமு, உதவித் தலைவர் ராட்ஸி ஜிடின் ஆகியோரை பதவியில் நிலைநிறுத்திக்கொள்ளவே வழிவகுக்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து-வின் கடைநிலை உறுப்பினர்களுக்காக ஏதும் செய்திடாத ராட்ஸி ஜிடின், கடந்த பொதுத்தேர்தலில் தம்புன் நாடாளுமன்றத்தில் தோல்வி கண்டதோடு, நெகிரி செம்பிலானை கைப்பற்ற தவறிய பைசல் அசுமு ஆகியோரை, பதவியில் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் என்ன? எனவும் அவர் வினவினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்