May 22, 2026
Thisaigal NewsYouTube
தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் பெர்சாத்து கட்சி வெல்லும்!
அரசியல்

தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும் பெர்சாத்து கட்சி வெல்லும்!

Share:

சிலாங்கூர், மே 31-

சிலாங்கூர், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதியில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டாலும், பெர்சாத்து கட்சியே அங்கு வெற்றி பெறும்.

முன்புபொரு காலத்தில், அம்னோவின் கோட்டையாக திகழ்ந்த அத்தொகுதி, தற்போது, தங்களுக்கு வைப்பு தொகையுடைய தொகுதியாக விளங்குவதாக, பெர்மாடாங் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பெர்சாத்து தஞ்சோங் காராங் தொகுதி இடைக்கால தலைவருமான நூருல் சியாஸ்வானி நோஹ் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் சட்டமன்ற தேர்தலில், தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதிக்கு கீழ் உள்ள பெர்மாடாங் , சுங்கை போரோங் ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளில், பெரிக்காதான் நசியனால் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆகையால், இடைத்தேர்தல் நடைபெற்றால், தங்கள் வசமுள்ள இரு சட்டமன்ற தொகுதிகளிலிருந்து நிரந்தர வாக்குகள், தங்கள் கூட்டணிக்கு நிச்சயம் கிடைக்கும் என நூருல் சியாஸ்வானி கூறினார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-முக்கு ஆதரவை வழங்கியதற்காக தஞ்சோங் காராங் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் டத்தோ டாக்டர் சுல்காபெரி ஹனாபி, விளக்கம் அளிக்கக்கோரி, பெர்சாத்து கட்சி இரு வாரக்கெடுவுடன் அவருக்கு கடிதத்தை அனுப்பியிருந்தது.

இன்றுடன் அந்த காலக்கெடு முடிவடைவதால், அவர் உரிய பதிலளிக்கவில்லை என்றால் பெர்சாத்து கட்சியில் அவரது உறுப்பினர் தகுதி பறிபோகுவதோடு, அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகின்றது.

Related News

மலேசியாவில் டிசம்பர் மாதம் வரையில் எரிசக்தி விநியோகத்திற்கு சிக்கல் இல்லை / பிரதமர் அன்வார் உறுதி

மலேசியாவில் டிசம்பர் மாதம் வரையில் எரிசக்தி விநியோகத்திற்கு சிக்கல் இல்லை / பிரதமர் அன்வார் உறுதி

"மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்" - பாஸ் கட்சிக்கு அம்னோ அழைப்பு

"மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்" - பாஸ் கட்சிக்கு அம்னோ அழைப்பு

"எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு" - பாஸ் பெர்சாத்து கூட்டணி குறித்து ஹாடி அவாங் கருத்து

"எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு" - பாஸ் பெர்சாத்து கூட்டணி குறித்து ஹாடி அவாங் கருத்து

சிலாங்கூர் சுல்தானுக்கு விசுவாசம் காட்டுவதில் இரட்டை நிலைப்பாடு வேண்டாம் - சிலாங்கூர் மந்திரி பெசார் எச்சரிக்கை

சிலாங்கூர் சுல்தானுக்கு விசுவாசம் காட்டுவதில் இரட்டை நிலைப்பாடு வேண்டாம் - சிலாங்கூர் மந்திரி பெசார் எச்சரிக்கை

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்