Dec 21, 2025
Thisaigal NewsYouTube
ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!
அரசியல்

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

Share:

பட்டர்வொர்த், டிசம்பர்.21-

தேசிய முன்னணி கூட்டணியில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து ம.இ.கா. உடனடியாகத் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என அக்கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மிகக் கடுமையான ‘கடைசி எச்சரிக்கை’ விடுத்துள்ளார்! தேசியக் கூட்டணியில் சேர ம.இ.கா. கடிதம் கொடுத்ததாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், காலையில் ஒன்று மாலையில் ஒன்று எனப் பேசாமல் உண்மையுடன் இருக்குமாறு ஸாஹிட் ஹமிடி சீறியுள்ளார். தங்களின் தலைவிதி குறித்து ம.இ.கா.வால் தீர்க்கமான முடிவெடுக்க முடியாவிட்டால், தேசிய முன்னணி தலைமையே அதிரடியாக இறங்கி அவர்கள் குறித்த இறுதி முடிவை எடுக்கும் என அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

"நண்பர்களாக" இருக்கும் மலேசிய மக்கள் சக்தி கட்சி போன்ற கட்சிகளைத் தேசிய முன்னணியின் முக்கிய அங்கமாக மாற்றத் திட்டமிட்டு வருவதாகவும், துரோகத்தை விட விசுவாசமே தமக்கு முக்கியம் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். 51 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட தேசிய முன்னணி தனது கூட்டணியை மறுசீரமைக்கப் போவதாகவும், இனி வளைந்து கொடுக்கப் போவதில்லை என்றும் ஸாஹிட் ஹமிடியின் இந்த அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்... | Thisaigal News