Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்கள் ஜசெகவை ஏற்றுக் கொண்டுள்ளனர்
அரசியல்

மலாய்க்காரர்கள் ஜசெகவை ஏற்றுக் கொண்டுள்ளனர்

Share:

மாநில சட்டமன்றத் தேர்தல்களில்
ஜசெகவின் சிறப்பான அடைவு நிலை, மலாய்
வாக்காளர்கள் அக்கட்சியை
ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது என்று
கட்சியின் துணைத் தலைவர் ஙா கோர் மிங்
தெரிவித்துள்ளாரர்.

நெகிரி செம்பிலான், பினாங்கு, சிலாங்கூர்
மற்றும் கெடாவில் ஜசெக போட்டியிட்ட 47
தொகுதிகளில் 46 இடங்களில் வெற்றி
பெற்றது.

இதற்கு முன் ஜசெக பல்வேறு கட்டுக்
கதைகளால் பாதிக்கப்பட்டது. ஆனால், மக்கள்
இப்போது கட்சியின் அர்ப்பணிப்பைக் காணத் தொடங்கி
விட்டனர். இது கட்சியின் மீது நேர்மறையான
வெளிச்சம் பட வைத்துள்ளது. 60
விழுக்காட்டு மலாய்க்காரர்களைக் கொண்ட
சிலாங்கூரின் சுங்கை பீலேக் தொகுதியில்
வென்றது இனிமையான வெற்றியாகும்
என்று ஙா கோர் மிங் கூறினார்.

புத்ராஜெயாவில் ஊராட்சி மன்ற
அமைச்சின் 2023 ஆம் ஆண்டிற்கான சிறப்பு
விருது வழங்கும் விழாவின் முன்னோட்டத்தில்
கலந்து கொண்டப் பின்னர் ஊராட்சி மன்ற
மேம்பாட்டுத் துறை அமைச்சருமான அவர்
செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள
கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு
சரியான தடத்தில் செல்வதை இது காட்டுகிறது என்று அவர்
மேலும் குறிப்பிட்டார்
ஜசெக-அம்னோ கூட்டணி எட்டு மாதங்களாக
மட்டுமே உள்ளது என்பதை கருத்தில்
கொண்டு பார்க்கையில் இது ஒரு நல்ல
தொடக்கமாகும். ஒற்றுமை அரசாங்கம்
வலுவாகவும் நிலையானதாகவும் இருக்க
அவகாசம் கொடுங்கள் என்று அவர்
கூறினார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத்
தேர்தலில் ஜசெக 97.9 சதவீத வெற்றியைப்
பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்