Aug 12, 2026
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனலிருந்து மசீச. வெளியேறுகிறதா?
அரசியல்

பாரிசான் நேஷனலிருந்து மசீச. வெளியேறுகிறதா?

Share:

கோலாலம்பூர், மே.30-

பாரிசான் நேஷனலிருந்து மசீச. வெளியேறி, பெரிக்காத்தான் நேஷனலில் இணையலாம் என்று ஆருடங்கள் பலமாக வலுத்து வரும் வேளையில், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அந்தக் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் தீ லியான் கேர் அறிவுறுத்தியுள்ளார்.

இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பது தூரத்திலிருந்து பார்ப்பதற்குச் சுகமாகவும் பசுமையாகவும் இருக்கும். ஆனால், சுதந்திரத்திற்கு முன்பிலிருந்து கூட்டணியில் ஓர் அங்கம் வகித்தக் கட்சி என்ற முறையில் தனது வரலாற்றை மசீச இழந்து விடக்கூடாது என தீ லியான் கேர் வலியுறுத்தினார்.

கூட்டணியில் வெற்றி, தோல்விக்கு மத்தியில் பாரிசான் நேஷனலில் இருந்து, அக்கட்சிப் போராட வேண்டும். மீண்டும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்று தீ லியான் கேர் கேட்டுக் கொண்டார்.

இன அடிப்படையிலான அரசியல் கட்சியை, மலாய்க்காரர் அல்லாத பெரும்பாலோர் வெறுக்கத் தொடங்கி விட்டனர். அதே வேளையில் ஒரு கடுமையானக் காலக் கட்டத்தில் தாய்க் கட்சி, பிரச்னையை எதிர்நோக்கி உள்ள வேளையில் அதனை விட்டு ஓடுவது என்பது பொறுப்பற்றச் செயல் ஆகும்.

சீன சமூகத்தின் பொறுப்பான கட்சி என்றால் மண்ணோடு மண்ணாக மண் மூடிப் போவதை விட, கட்சியின் நலன் சார்ந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்துப் போராட வேண்டும். போராட்டம் மிகுந்த கட்சியே வெற்றி பெறும், பயந்து ஓடுவது இல்லை என்று தீ லியான் கேர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்