புதிய அரசியல் கட்சி அமைப்பது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின்-ஐ தாம் சந்திக்கவோ, அவரின் முயற்சிகளில் பங்கேற்கவோ போவதில்லை என புக்கிட் காந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் ஃபசல் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பான எந்த விவாதங்களிலும் தாம் ஈடுபடவில்லை என்றும், தற்போதைக்குக் கட்சி சார்பற்றவராகவே தாம் இருப்பதாகவும் சையத் அபு ஹுசின் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், ஹம்ஸாவின் 'புதிய கட்சி' குறித்து கருத்துரைத்த அவர், மக்கள் தங்கள் சிந்தனையில் முதிர்ச்சியுடன் செயல்பட்டு, சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.








