மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ சி. சிவராஜ், கட்சியின் மத்திய செயலவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிவராஜ் நீக்கத்தை மஇகா உயர் மட்டத் தலைவர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மஇகா உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் உதவித்தலைவர் பதவியை தற்காத்துக்கொள்வதில் தோல்விக் கண்ட சிவராஜ், பின்னர் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினாக நியமிக்கப்பட்டார்.
எனினும் மத்திய செயலவையிலிருந்து சிவராஜ் அகற்றப்பட்டு இருப்பது தொடர்பில் அவருக்கு கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் சிவராஜ், மேலவை உறுப்பினராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
