மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ சி. சிவராஜ், கட்சியின் மத்திய செயலவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிவராஜ் நீக்கத்தை மஇகா உயர் மட்டத் தலைவர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மஇகா உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் உதவித்தலைவர் பதவியை தற்காத்துக்கொள்வதில் தோல்விக் கண்ட சிவராஜ், பின்னர் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினாக நியமிக்கப்பட்டார்.
எனினும் மத்திய செயலவையிலிருந்து சிவராஜ் அகற்றப்பட்டு இருப்பது தொடர்பில் அவருக்கு கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் சிவராஜ், மேலவை உறுப்பினராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


