மஇகாவின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ சி. சிவராஜ், கட்சியின் மத்திய செயலவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிவராஜ் நீக்கத்தை மஇகா உயர் மட்டத் தலைவர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மஇகா உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் உதவித்தலைவர் பதவியை தற்காத்துக்கொள்வதில் தோல்விக் கண்ட சிவராஜ், பின்னர் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினாக நியமிக்கப்பட்டார்.
எனினும் மத்திய செயலவையிலிருந்து சிவராஜ் அகற்றப்பட்டு இருப்பது தொடர்பில் அவருக்கு கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் ஓர் கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் சிவராஜ், மேலவை உறுப்பினராக கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து


