May 17, 2026
Thisaigal NewsYouTube
தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும்: லோக் கருத்து
அரசியல்

தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்ய வேண்டும்: லோக் கருத்து

Share:

ஜோகூர் பாரு, மே.17-

கட்சி சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள், மக்களின் ஆணையை மதித்து, அடுத்த தேர்தல் வரை பதவியில் தொடர வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் துணைத் தலைவர் லோக் சியூ ஃபூக் தெரிவித்துள்ளார்.

வேட்பாளர்கள் தங்கள் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் பலத்தால் தான் வெற்றி பெறுகிறார்கள் என்பதால் அக்கொள்கையானது மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிகேஆர் தலைவர்களான டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லியும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் இன்று கட்சியை விட்டு விலகி, நாளை தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் காலி செய்யும் முடிவை அறிவித்துள்ளது குறித்து லோக் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இத்தகைய நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம் என்றும், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற தொகுதிகள் காலியாக அறிவிக்கப்படுமா? என்பது குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை

ரஃபிஸி, நிக் நஸ்மி இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

ரஃபிஸி, நிக் நஸ்மி இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவிப்பு

ரஃபிஸி, நிக் நஸ்மியின் உறுப்பினர் பதவி தானாகவே இரத்து செய்யப்படும் - பிகேஆர் அறிவிப்பு

ரஃபிஸி, நிக் நஸ்மியின் உறுப்பினர் பதவி தானாகவே இரத்து செய்யப்படும் - பிகேஆர் அறிவிப்பு

ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மியின் புதிய அரசியல் பயணம்: மலேசிய ஐக்கியக் கட்சியைக் கைப்பற்றினர்

ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மியின் புதிய அரசியல் பயணம்: மலேசிய ஐக்கியக் கட்சியைக் கைப்பற்றினர்

ஜோகூரில் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டி - பாரிசானை அடுத்து பக்காத்தான் கூட்டணியும் அறிவிப்பு

ஜோகூரில் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டி - பாரிசானை அடுத்து பக்காத்தான் கூட்டணியும் அறிவிப்பு

ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் கூடுதல் இடங்கள் கோரி மனு சமர்ப்பிக்கத் திட்டம்

ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் கூடுதல் இடங்கள் கோரி மனு சமர்ப்பிக்கத் திட்டம்