Aug 12, 2026
Thisaigal NewsYouTube
தெங்கு ஸாஃப்ருலை ஓர் உறுப்பினராக பிகேஆர் ஏற்றுக் கொள்வது ஏற்புடையச் செயல் அல்ல
அரசியல்

தெங்கு ஸாஃப்ருலை ஓர் உறுப்பினராக பிகேஆர் ஏற்றுக் கொள்வது ஏற்புடையச் செயல் அல்ல

Share:

கோலாலம்பூர், மே.31-

அம்னோவிலிருந்து விலகி, பிகேஆர் கட்சியில் இணைவதாக அறிவித்துள்ள முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸை ஓர் உறுப்பினராக பிகேஆர் ஏற்றுக் கொள்வது, ஏற்புடையச் செயல் அல்ல என்று அம்னோ பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் விருப்பம் போல் கட்சி விட்டு கட்சிப் பாய்வதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது, ஏற்றுக் கொள்ளவும் கூடாது என்று அஷ்ராஃப் வஜ்டி குறிப்பிட்டார்.

மேலும் அம்னோவிலிருந்து விலகி விட்டதாக தெங்கு ஸாஃப்ருல் அறிவித்த போதிலும், அவரின் விலகல் கடிதத்தை அம்னோ இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பெறவில்லை என்பதையும் அஷ்ராஃப் வஜ்டி தெளிவுபடுத்தினார்.

சிலாங்கூர் கோத்தா ராஜா அம்னோ தொகுதியின் தலைவருமான தெங்கு ஸாஃப்ருல், பிகேஆர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்து இருப்பதை அம்னோ கடுமையாகக் கருதுவதாக அஷ்ராஃப் வஜ்டி குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி விட்டு கட்சித் தாவுவதைத் தடை செய்து இருக்கிறோம். அதே போல், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகளும் தங்கள் உறுப்பினர்கள், உறுப்புக் கட்சிகளுக்குத் தாவுவதைத் தடை செய்ய வேண்டும். அதனை அனுமதிக்கக்கூடாது, அந்த நபரை உறுப்பினராக ஏற்றுக் கொள்ளவு கூடாது என்று பிகேஆர் கட்சிக்கு அஷ்ராஃப் வஜ்டி அறிவுறுத்தியுள்ளார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்