Apr 20, 2026
Thisaigal NewsYouTube
வானிலை மோசமடைந்தால் நாளை சபா தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்
அரசியல்

வானிலை மோசமடைந்தால் நாளை சபா தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.28-

சபா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறும் நிலையில் வானிலை மோசமாக இருக்குமனால் தேர்தல் நடைபெறுவது ஒத்தி வைக்கப்படலாம் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் இன்று அறிவித்துள்ளது.

கனமழை, பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் சபா தேர்தலை ஒத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இன்று பிற்பகலில் கோத்தா கினபாலுவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் எஸ்பிஆர் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹாருன் தெரிவித்தார்.

மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் ஒத்துழைப்புடன் சபாவின் வானிலையை எஸ்பிஆர் தற்போது அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News