அமைச்சரவையில் டிஏபி கட்சி குறைவான மற்றும் சமமற்ற எண்ணிக்கையில் பதவிகளைப் பெற்றது குறித்து அதன் பொதுச் செயலாளர் ஆண்டனி லோக் விளக்கமளித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் துருவமுனைப்பு அரசியல் நிலப்பரப்பு காரணமாக, குறிப்பாக இன மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்நோக்கிக் கட்சி சகிப்புத்தன்மையுடன் இருப்பதைத் தேர்வுசெய்வதனால் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான பதவிகளை பெற்றுள்ளதாக ஆண்டனி லோக் தெரிவித்தார்.
எதுவாக இருந்தாலும், இந்த அரசாங்கத்தை செயல்பட வைக்க வேண்டும். ஏனெனில் இந்த அரசாங்கம் நமது பல்லின சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பை நிலைநிறுத்துகிறது என்றும், இவ்விவகாரத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும் உறுதியாக இருப்பதாகவும் போக்குவரத்து அமைச்சருமான ஆண்டனி லோக் குறிப்பிட்டார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


