நவ. 24-
பெரிக்காத்தன் நேசனல் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்த விவாதம் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் எழுப்பப்படும் என்று அக்கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் எராக்கான் கட்சியின் கட்சியின் தலைவர் Dominic Lau தெரிவித்துள்ளார்.
அக்கூட்டணியின் உறுப்பு கட்சிகளுக்கு இடையே எழும் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க இந்த கூட்டம் உதவும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக, PAS கட்சியின் Mursyidul Am, Hashim Jasin, பெரிக்காத்தன் நேசனல் கட்சியை தலைமையேற்க PAS கட்சிக்கு அதிக தகுதி உண்டு என்று கூறியதை அடுத்து இந்த விவாதம் எழுந்துள்ளது.
இருப்பினும், பெரிக்காத்தன் நேசனல் கட்சியின் தற்போதைய தலைவர் Muhyiddin Yassinதான் பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் Wan Saiful Wan Jan உள்ளிட்ட பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், பெரிக்காத்தன் நேசனல் கூட்டணியில் உள்ள உறுப்புகட்சிகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படாது என்று டொமினிக் லாவ் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம், மலேசியாவின் அரசியல் கட்சிகளுக்கு இடையே எழும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். அதாவது, எந்த கட்சிக்கு அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும், அந்த கட்சியின் தலைவரே பிரதமர் ஆக வேண்டும் என்பதில்லை. மாறாக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைப் பெறக்கூடிய ஒருவரே பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என டொமினிக் மேலும் கூறினார்.








