பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் டிஏபி சார்பில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள மாநில துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, அக்கட்சியில் தொடர்ந்து நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், தமத எதிர்காலத்தைப்பற்றி திட்டமிட வேண்டியுள்ளது என்றும் டாக்டர் இராமசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டில் டிஏபி யில் இணைந்த 74 வயதான டாக்டர் பி. இராமசாமி கடந்த 2008 ஆம் ஆண்டு 12 ஆவது பொதுத்தேர்தலில் பிறை சட்டமன்றத் தொகுதியிலும், பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றார். மூன்று தவணைக்காலம் பிறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதேவேளையில் பினாங்கு துணை முதலமைச்சராகவும் 15 ஆண்டு காலம் பொறுப்பில் இருந்தார். இந்த முறை தம்மை மீண்டும் வேட்பாளராக டிஏபி தேர்வு செய்யவில்லை என்ற போதிலும் அக்கட்சியைவிட்டு விலகும் திட்டம் ஏதும் இல்லை என்று ஒரு கல்விமானாகிய டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


