பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் டிஏபி சார்பில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள மாநில துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, அக்கட்சியில் தொடர்ந்து நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், தமத எதிர்காலத்தைப்பற்றி திட்டமிட வேண்டியுள்ளது என்றும் டாக்டர் இராமசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டில் டிஏபி யில் இணைந்த 74 வயதான டாக்டர் பி. இராமசாமி கடந்த 2008 ஆம் ஆண்டு 12 ஆவது பொதுத்தேர்தலில் பிறை சட்டமன்றத் தொகுதியிலும், பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றார். மூன்று தவணைக்காலம் பிறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதேவேளையில் பினாங்கு துணை முதலமைச்சராகவும் 15 ஆண்டு காலம் பொறுப்பில் இருந்தார். இந்த முறை தம்மை மீண்டும் வேட்பாளராக டிஏபி தேர்வு செய்யவில்லை என்ற போதிலும் அக்கட்சியைவிட்டு விலகும் திட்டம் ஏதும் இல்லை என்று ஒரு கல்விமானாகிய டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


