பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் டிஏபி சார்பில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள மாநில துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, அக்கட்சியில் தொடர்ந்து நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், தமத எதிர்காலத்தைப்பற்றி திட்டமிட வேண்டியுள்ளது என்றும் டாக்டர் இராமசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டில் டிஏபி யில் இணைந்த 74 வயதான டாக்டர் பி. இராமசாமி கடந்த 2008 ஆம் ஆண்டு 12 ஆவது பொதுத்தேர்தலில் பிறை சட்டமன்றத் தொகுதியிலும், பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றார். மூன்று தவணைக்காலம் பிறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதேவேளையில் பினாங்கு துணை முதலமைச்சராகவும் 15 ஆண்டு காலம் பொறுப்பில் இருந்தார். இந்த முறை தம்மை மீண்டும் வேட்பாளராக டிஏபி தேர்வு செய்யவில்லை என்ற போதிலும் அக்கட்சியைவிட்டு விலகும் திட்டம் ஏதும் இல்லை என்று ஒரு கல்விமானாகிய டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


