Jun 28, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் பிரச்சாரத்திற்கு போக மாட்டேன்
அரசியல்

தேர்தல் பிரச்சாரத்திற்கு போக மாட்டேன்

Share:

பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் டிஏபி சார்பில் ​மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள மாநில துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, அக்கட்சியில் தொடர்ந்து ​நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், தமத எதிர்காலத்தைப்பற்றி திட்டமிட வேண்டியுள்ளது என்றும் டாக்டர் இராமசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டில் டிஏபி யில் இணைந்த 74 வயதான டாக்டர் பி. இராமசாமி கடந்த 2008 ஆம் ஆண்டு 12 ஆவது பொதுத்தேர்தலில் பிறை சட்டமன்றத் தொகுதியிலும், பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றார். ​மூன்று தவணைக்காலம் பிறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதேவேளை​யில் பினாங்கு துணை முதலமைச்சராகவும் 15 ஆண்டு காலம் பொறுப்பில் இருந்தார். இந்த முறை தம்மை ​மீண்டும் வேட்பாளராக டிஏபி தேர்வு செய்யவில்​லை என்ற போதிலும் அக்கட்சியைவிட்டு விலகும் திட்டம் ஏதும் இல்லை என்று ஒரு கல்விமானாகிய டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு