முன்னாள் அமைச்சர் ஒருவர், தமக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தாக 37 வயது மாது ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டை பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரும், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சருமான அமாட் பைசல் அசுமு மறுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பெண், தமக்கு எதிராக அவதூறு தன்மையில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பேரா மாநில முன்னாள் மந்திரி புசாருமான அமாட் பைசல், கோலாலம்பூர், ஸ்ரீ ஹர்தமாஸ் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் பிளாசா டமாஸ் என்ற இடத்தில் அந்த முன்னாள் அமைச்சர் தமக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக அந்தப் பெண் கூறுகிறார்.
எனினும் அந்த பெண் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் இடத்தில் தாம் இல்லை என்றும் அந்த நேரத்தில் நெகிரி செம்பிலானில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் தாம் கலந்து கொண்டதாகவும், அதற்கான ஆதாரங்களை தாம் கொண்டுள்ளதாகவும் அமாட் பைசல் தமது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


