Aug 7, 2026
Thisaigal NewsYouTube
வேட்பாளர்களை விட கட்சிப் பெயருக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இளம் வாக்காளர்கள்
அரசியல்

வேட்பாளர்களை விட கட்சிப் பெயருக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இளம் வாக்காளர்கள்

Share:

நாளை நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநில பொதுத்தேர்தலில், வேட்பாளர்களின் தனிப்பட்ட தகுதியை விட அரசியல் கட்சிகளின் அடையாளத்தைப் பார்த்தே இளம் வாக்காளர்கள் வாக்களிக்க முனைகிறார்கள் என இல்ஹாம் சென்டர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களில் சுமார் 48 சதவீதம் பேர் இளைஞர்கள் ஆவர். இதில் பாகான் பினாங்கில் 60 விழுக்காட்டினர், பாரோயில் 59 விழுக்காட்டினர் உள்ளிட்ட ஐந்து தொகுதிகளில் இவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

இந்த இளம் வாக்காளர்கள் தங்களுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை நேரில் தெரியாவிட்டாலும், சமூக ஊடகங்கள் மற்றும் கட்சிப் பிராண்டுகளின் அடிப்படையிலேயே ஏற்கனவே தங்களின் முடிவை எடுத்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மலாய்-இஸ்லாமிய உணர்வுசார் அரசியல் இவர்களின் முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, வீட்டுவசதி போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளை இருதரப்பு அரசியல் கட்சிகளும் பிரச்சாரங்களில் பெரிய அளவில் பேசாமல் புறக்கணித்துவிட்டதாகவும் இல்ஹாம் சென்டர் சுட்டிக்காட்டியுள்ளது.

Related News

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார்  வரவேற்பு

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார் வரவேற்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

வேட்பாளர்களை விட கட்சிப் பெயருக்கே முக்கியத்துவம் கொடுக்க... | Thisaigal News