விரைவில் ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் எந்த வகையிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிலையை பாதிக்க செய்யாது என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நம்புகிறது.
மாநில தேர்தல்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கூட்டரசு அரசாங்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக, எம்.பி.க்களின் பெரும்பான்மையான ஆதரவு அன்வாருக்கு இருக்கும் வரையில் அவரின் நாற்காலி ஆட்டம் காணாது என்று அக்கூட்டணி கூறுகிறது.
இந்த ஆறு மாநில தேர்தல்களில் 4 மாநிலங்கள் மிக முக்கியமானதாகும். கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பான் மகத்தான் வெற்றி பெறுமானால், அன்வாரின் செல்வாக்கு அதிகரிக்கும். அதேவேளையில் அவற்றை கைப்பற்ற தவறுமானால், அதனால் மத்திய அளவில் அரசியல் நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், கவனமாக செயல்பட வேண்டிய எச்சரிக்கையை பக்காத்தான் ஹராப்பானுக்கு விடுக்கும் என்று அந்த கூட்டணி கூறுகிறது.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


