விரைவில் ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் எந்த வகையிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிலையை பாதிக்க செய்யாது என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நம்புகிறது.
மாநில தேர்தல்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கூட்டரசு அரசாங்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக, எம்.பி.க்களின் பெரும்பான்மையான ஆதரவு அன்வாருக்கு இருக்கும் வரையில் அவரின் நாற்காலி ஆட்டம் காணாது என்று அக்கூட்டணி கூறுகிறது.
இந்த ஆறு மாநில தேர்தல்களில் 4 மாநிலங்கள் மிக முக்கியமானதாகும். கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பான் மகத்தான் வெற்றி பெறுமானால், அன்வாரின் செல்வாக்கு அதிகரிக்கும். அதேவேளையில் அவற்றை கைப்பற்ற தவறுமானால், அதனால் மத்திய அளவில் அரசியல் நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், கவனமாக செயல்பட வேண்டிய எச்சரிக்கையை பக்காத்தான் ஹராப்பானுக்கு விடுக்கும் என்று அந்த கூட்டணி கூறுகிறது.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


