விரைவில் ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் எந்த வகையிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிலையை பாதிக்க செய்யாது என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நம்புகிறது.
மாநில தேர்தல்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கூட்டரசு அரசாங்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக, எம்.பி.க்களின் பெரும்பான்மையான ஆதரவு அன்வாருக்கு இருக்கும் வரையில் அவரின் நாற்காலி ஆட்டம் காணாது என்று அக்கூட்டணி கூறுகிறது.
இந்த ஆறு மாநில தேர்தல்களில் 4 மாநிலங்கள் மிக முக்கியமானதாகும். கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பான் மகத்தான் வெற்றி பெறுமானால், அன்வாரின் செல்வாக்கு அதிகரிக்கும். அதேவேளையில் அவற்றை கைப்பற்ற தவறுமானால், அதனால் மத்திய அளவில் அரசியல் நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், கவனமாக செயல்பட வேண்டிய எச்சரிக்கையை பக்காத்தான் ஹராப்பானுக்கு விடுக்கும் என்று அந்த கூட்டணி கூறுகிறது.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து


