விரைவில் ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் எந்த வகையிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிலையை பாதிக்க செய்யாது என்று பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நம்புகிறது.
மாநில தேர்தல்களில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், கூட்டரசு அரசாங்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக, எம்.பி.க்களின் பெரும்பான்மையான ஆதரவு அன்வாருக்கு இருக்கும் வரையில் அவரின் நாற்காலி ஆட்டம் காணாது என்று அக்கூட்டணி கூறுகிறது.
இந்த ஆறு மாநில தேர்தல்களில் 4 மாநிலங்கள் மிக முக்கியமானதாகும். கெடா, பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் பக்காத்தான் ஹராப்பான் மகத்தான் வெற்றி பெறுமானால், அன்வாரின் செல்வாக்கு அதிகரிக்கும். அதேவேளையில் அவற்றை கைப்பற்ற தவறுமானால், அதனால் மத்திய அளவில் அரசியல் நிலைத்தன்மையில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், கவனமாக செயல்பட வேண்டிய எச்சரிக்கையை பக்காத்தான் ஹராப்பானுக்கு விடுக்கும் என்று அந்த கூட்டணி கூறுகிறது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
