Aug 26, 2026
Thisaigal NewsYouTube
மஇகாவின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் கேபி சாமி, பிகேஆரில் சேர விண்ணப்பித்துள்ளார்
அரசியல்

மஇகாவின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் கேபி சாமி, பிகேஆரில் சேர விண்ணப்பித்துள்ளார்

Share:

கிள்ளான்,அக்டோபர் 13-

மஇகாவின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் கேபி சாமி, பிகேஆரில் சேர விண்ணப்பித்துள்ளார். பிகேஆரின் கிள்ளான் பிரிவில் தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறினார்.

பிகேஆர் மீது இந்திய சமூகத்தின் நம்பிக்கையை வலுப்படுத்துவதே தனது நோக்கம் என்றும், இது ஒரு கட்சி என்பதை விட இந்திய சமூகத்திற்கான அடுத்த மிகப்பெரிய தளம் என்றும் அவர் விவரித்தார்.

''ஐந்து நட்சத்திர அரசியலில்' தங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதற்கு முன்னர் இருந்ததை விட அதிகமான உறுப்பினர்களை ஈர்க்க முடியும் என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதனிடையை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய துணை அமைச்சர் கே.சரஸ்வதி, இந்திய சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகள் தொடர்பாக அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தொடர்பு இடைவெளி உள்ளது என்று கூறினார்.

அரசு எதுவுமே செய்யாமல் இருப்பதாகவும், இந்திய சமூகம் விரக்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் என்ன செய்தாலும் மக்களுக்கு சரியாக தெரிவிக்கப்படவில்லை என்பதே பிரச்சினை. நாம் இன்னும் ஒரு படி மேலே செல்ல வேண்டும். அவர்களுக்கு நேரடியாக செய்தியை வழங்க, தரையில் உள்ளவர்கள் தேவை, என்று அவர் கூறினார்.

Related News

மஇகாவின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் கேபி சாமி, பிகேஆ... | Thisaigal News