வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கம் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வெற்றி பெற்றால் மத்திய அரசில் மாற்றம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்து வரும் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் கடுமையாக சாடினார்.
பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் இந்த கூற்று, “தெளிவான பொய்” என்று ராம் கர்ப்பால் வர்ணித்துள்ளார்.
கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட கட்சி தாவல் தடுப்புச் சட்டம், எம்.பி.க்கள் கட்சிவிட்டு கட்சித் தாவுவதை தடுக்கும் என்று ராம் கர்ப்பால் விளக்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கட்சி மாறினால், அவர்களின் இடங்கள் காலியாகிவிடும் என்றும், இது இடைத்தேர்தலுக்கு வழி வகுக்கும் என்பதுடன் கட்சி மாறியவர்கள் தேர்தலில் மீண்டும் வேட்பாளராக போட்டியிட முடியாது என்பதையும் டிஏபி எம்.பி.யான ராம் கர்ப்பால் விளக்கினார்.
“மாநில தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் பெரிய வெற்றி பெற்றால், அது மத்திய அரசாங்கம் அளவில் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி மக்களிடையே பெரும் பதற்றத்தை உருவாக்க ஹாடி முயற்சிக்கிறார் என்று ராம் கர்ப்பால் குற்றஞ்சாட்டினார்.

Related News

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்


