மஇகாவும், மசீச.வும் மிக குறைந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை கொண்டு இருப்பதால் அவ்விரு கட்சிகளும் அரசியலில் நீடிக்க இனி ஊராட்சி மன்றங்களில் உள்ள பதவிகளை நம்பித்தான் காலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் கணித்துள்ளார். பாரிசான் நேஷனலின் இந்த இரண்டு கட்சிகளும் தற்போது 3 நாடாளுன்றத் தொகுதிகளையும், 12 சட்டமன்றத் தொகுதிகளையும் கையில் வைத்திருக்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில் மசீச 2 நாடாளுமன்றத் தொகுதிகளையும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்றது.மஇகா ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை கொண்டுள்ளது. கைவசம் இருந்த ஜெராம் பாடாங் தொகுதியையும் இழந்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் வரையில் மசீச. மற்றும் மஇகாவின் இந்த பலவீனமான நிலை நீடிக்கும் நிலையில், அவ்விரு கட்சிகளும் இனி ஊராட்சிமன்றப் பதவிகளை நம்பியிருக்க வேண்டிய ஓர் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட் கூறுகிறார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


