மஇகாவும், மசீச.வும் மிக குறைந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை கொண்டு இருப்பதால் அவ்விரு கட்சிகளும் அரசியலில் நீடிக்க இனி ஊராட்சி மன்றங்களில் உள்ள பதவிகளை நம்பித்தான் காலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் கணித்துள்ளார். பாரிசான் நேஷனலின் இந்த இரண்டு கட்சிகளும் தற்போது 3 நாடாளுன்றத் தொகுதிகளையும், 12 சட்டமன்றத் தொகுதிகளையும் கையில் வைத்திருக்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில் மசீச 2 நாடாளுமன்றத் தொகுதிகளையும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்றது.மஇகா ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை கொண்டுள்ளது. கைவசம் இருந்த ஜெராம் பாடாங் தொகுதியையும் இழந்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் வரையில் மசீச. மற்றும் மஇகாவின் இந்த பலவீனமான நிலை நீடிக்கும் நிலையில், அவ்விரு கட்சிகளும் இனி ஊராட்சிமன்றப் பதவிகளை நம்பியிருக்க வேண்டிய ஓர் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட் கூறுகிறார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


