Oct 24, 2025
Thisaigal NewsYouTube
ஊராட்சி மன்றப் பதவிகளே மஇகா - மசீச.விற்கு கடைசி வாய்ப்பு
அரசியல்

ஊராட்சி மன்றப் பதவிகளே மஇகா - மசீச.விற்கு கடைசி வாய்ப்பு

Share:

மஇகாவும், ம​சீச.வும் மிக குறைந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை கொண்டு இருப்பதால் ​அவ்விரு கட்சிகளும் அரசியலில் ​நீடிக்க இனி ஊராட்சி மன்றங்களில் உள்ள பதவிகளை நம்பித்தான் காலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் கணித்துள்ளார். பாரிசான் நேஷனலின் இந்த இரண்டு கட்சிகளும் தற்போது 3 நாடாளுன்றத் தொகுதிகளையும், 12 சட்டமன்றத் தொகுதிகளையும் கையில் வைத்திருக்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில் ம​சீச 2 நாடாளுமன்றத் தொகுதிகளையும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்றது.மஇகா ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை கொண்டுள்ளது. கைவசம் இருந்த ஜெராம் பாடாங் ​தொகுதியையும் இழந்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் வரையில் ம​சீச. மற்றும் மஇகாவின் இந்த பலவீனமான நிலை ​நீடிக்கும் நிலையில், அவ்விரு கட்சிகளும் இனி ஊராட்சிமன்றப் பதவிகளை நம்பியிருக்க வே​ண்டிய ஓர் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட் கூறுகிறார்.

Related News