மஇகாவும், மசீச.வும் மிக குறைந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதித்துவத்தை கொண்டு இருப்பதால் அவ்விரு கட்சிகளும் அரசியலில் நீடிக்க இனி ஊராட்சி மன்றங்களில் உள்ள பதவிகளை நம்பித்தான் காலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் கணித்துள்ளார். பாரிசான் நேஷனலின் இந்த இரண்டு கட்சிகளும் தற்போது 3 நாடாளுன்றத் தொகுதிகளையும், 12 சட்டமன்றத் தொகுதிகளையும் கையில் வைத்திருக்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில் மசீச 2 நாடாளுமன்றத் தொகுதிகளையும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் பெற்றது.மஇகா ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை கொண்டுள்ளது. கைவசம் இருந்த ஜெராம் பாடாங் தொகுதியையும் இழந்துள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் வரையில் மசீச. மற்றும் மஇகாவின் இந்த பலவீனமான நிலை நீடிக்கும் நிலையில், அவ்விரு கட்சிகளும் இனி ஊராட்சிமன்றப் பதவிகளை நம்பியிருக்க வேண்டிய ஓர் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹுவாட் கூறுகிறார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


