Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் காணப்பட்டது ஏன்? - அன்வாரிடம் விளக்கம் கேட்கிறது பெரிக்காத்தான்
அரசியல்

மலேசியாவில் இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் காணப்பட்டது ஏன்? - அன்வாரிடம் விளக்கம் கேட்கிறது பெரிக்காத்தான்

Share:

மலேசிய கடல் எல்லையில் அமெரிக்க கடற்படை போர் கப்பல்கள் காணப்பட்டது குறித்து அரசாங்கம் விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்று பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வடக்கு பட்டர்வொர்த் கொள்கலன் முனையத்தில், அமெரிக்காவின் இரண்டு கடலோரப் போர் கப்பல்கள் நங்கூரமிட்டிருந்ததாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.

இக்கப்பல்கள் வெடிகுண்டு அகற்றும் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டவை என்றும், முன்னதாக மத்திய கிழக்கில் பணியில் ஈடுபட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின், அக்கப்பல்கள் மலேசிய விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டதாக விளக்கம் அளித்திருந்தார்.

இருப்பினும், இது போன்ற அறிக்கைகள், மத்திய கிழக்கு போரில் மலேசியா கடைப்பிடித்து வரும் நடுநிலைக் கொள்கைக்கு முரணாக இருக்குமா? என்ற கவலை எழுந்துள்ளதாக பெரிக்காத்தான் பொதுச்செயலாளர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

போரில் மலேசியா எவ்விதப் பங்கும் வகிக்காது எனப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்ட அறிவிப்பை பெரிக்காத்தான் வரவேற்றபோதிலும், மலேசியக் கடல் எல்லைக்குள் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கப்பல்களின் இருப்பு, போரில் மலேசியாவிற்கு மறைமுக பங்களிப்பு உள்ளதா என்ற கேள்விகளை எழுப்புவதாகவும் தக்கியுடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மகாதீர் முகமது உட்பட அனைவருமே மீண்டும் அம்னோவில் இணையலாம் - அகமட் மஸ்லான் தகவல்

மகாதீர் முகமது உட்பட அனைவருமே மீண்டும் அம்னோவில் இணையலாம் - அகமட் மஸ்லான் தகவல்

அன்வாரின் பிரதமர் பதவி செல்லாது என்று கூறும் பி.வேதமூர்த்தியின் மனு தள்ளுபடி / வழக்குச் செலவாக 80 ஆயிரம் ரிங்கிட் வழங்க உத்தரவு

அன்வாரின் பிரதமர் பதவி செல்லாது என்று கூறும் பி.வேதமூர்த்தியின் மனு தள்ளுபடி / வழக்குச் செலவாக 80 ஆயிரம் ரிங்கிட் வழங்க உத்தரவு

பிரதமர் அலுவலகம் சார்பில் 650 முன்வரிசைப் பணியாளர்களுக்கு 3 லட்சம் ரிங்கிட் செலவில் ரமலான் பரிசுகள்

பிரதமர் அலுவலகம் சார்பில் 650 முன்வரிசைப் பணியாளர்களுக்கு 3 லட்சம் ரிங்கிட் செலவில் ரமலான் பரிசுகள்

பெரிக்காத்தான் நேஷனல்லில் இணைய ம.இ.கா அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை - துணைத் தலைவர் சரவணன் விளக்கம்

பெரிக்காத்தான் நேஷனல்லில் இணைய ம.இ.கா அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்கவில்லை - துணைத் தலைவர் சரவணன் விளக்கம்

கத்தாரில் உள்ள மலேசியர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தூதரகம் எச்சரிக்கை

கத்தாரில் உள்ள மலேசியர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தூதரகம் எச்சரிக்கை

எதிர்கட்சித் தலைவர் ஹம்சா விரும்பினால் அம்னோவிற்குத் திரும்பலாம் - சம்ரி அப்துல் காதிர் அழைப்பு

எதிர்கட்சித் தலைவர் ஹம்சா விரும்பினால் அம்னோவிற்குத் திரும்பலாம் - சம்ரி அப்துல் காதிர் அழைப்பு