May 6, 2026
Thisaigal NewsYouTube
அனுமதி கிடைத்தும் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து ம.இ.கா ஆலோசிக்க முடிவு
அரசியல்

அனுமதி கிடைத்தும் பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து ம.இ.கா ஆலோசிக்க முடிவு

Share:

ஷா ஆலாம், ஜனவரி.24-

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து ஆலோசிக்க ம.இ.கா ஒரு கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

ம.இ.காவின் விண்ணப்பத்திற்கு பெரிக்காத்தான் நேஷனல் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தாலும், இது குறித்து கட்சிக்குள் விவாதிக்கப்பட உள்ளது என்று டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இன்று புக்கிட் கெமுனிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய டான் ஶ்ரீ விக்னேஸ்வரன், விரைவில் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கவுள்ளதாகக் கூறினார்.

எனினும், இதற்கான குறிப்பிட்ட தேதியை அவர் அறிவிக்கவில்லை. பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவுடன் தாம் கலந்து ஆலோசிக்கவிருப்பதாகவும், மிக விரைவில் தாங்கள் ஒன்று கூடி, அந்தத் தேதியை அறிவிக்கவிருப்பதாக டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் முன்னாள் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் பேசுகையில், ம.இ.காவின் விண்ணப்பத்திற்கு கூட்டணி ஒப்புதல் அளித்துள்ளதை உறுதிப்படுத்தினார். கடந்த ஆண்டே ம.இ.காவை இணைத்துக் கொள்ள பெரிக்காத்தான் நேஷனல் சம்மதித்ததாகவும், கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் முகைதீன் தெரிவித்திருந்தார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி