Dec 21, 2025
Thisaigal NewsYouTube
2025 ஆம் ஆண்டு பட்ஜெட் / பணவீக்கம் / சம்பள உயர்வுக்கு முன்னுரிமை / பிரதமர் அறிவிப்பு
அரசியல்

2025 ஆம் ஆண்டு பட்ஜெட் / பணவீக்கம் / சம்பள உயர்வுக்கு முன்னுரிமை / பிரதமர் அறிவிப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 05-

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் வரும் அக்டோபர் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் பண வீக்கம் மற்றும் சம்பள உயர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.

இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிகையில் மலேசியாவில் சமையல் எண்ணெய், பெட்ரோல் மற்றும் மாவு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மலிவாக இருந்தாலும், வருமான அளவை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டில் உற்பத்தித் திறன் மற்றும் முதலீடு அதிகரித்தாலும் வருமான அளவு உயராமல் இருந்து வருகிறது. எனவே வரும் அக்டோபர் 18 ஆம் தேதி சமப்பிக்கப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் சம்பள உயர்வுக்கு அதீத கவனம் செலுத்துவதாக இருக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

அரசு ஊழியர்களுக்கு அண்மையில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். விலைவாசி உயர்வு காரணமாக மக்களிடையே தேங்கி நிற்கின்ற கவலையை போக்கக்கூடிய ஒரு நிவாரணியாக 2025 ஆம் ஆண்டு பட்ஜெட் விளங்கக்கூடும் என்று CNBC- க்கு அளித்த பேட்டியில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்