6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து இருக்கும் மஇகாவும், மசீச.வும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கின்றன என்று கூறப்படுவதை பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ செரி டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.
எனினும் மஇகாவும், மசீச.வும் இந்த மாநில தேர்தல்களில் போட்டியிடாததற்கு சொந்த காரணங்கள் இருக்கலாம் என்பதை அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் ஒப்புக்கொண்டார். இருப்பினும்
வரும் ஜுலை 10 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாரிசான் நேஷனல் உச்சமன்றக்கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்படும் என்று ஜாஹிட் தெரிவித்தார்.
வருகின்ற 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் அதேவேளையில் இந்தியர்களின் மனங்களை வென்று எடுப்பதற்கு ஏதுவாக இந்த சட்டன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மஇகா முடிவு எடுத்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


