6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து இருக்கும் மஇகாவும், மசீச.வும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கின்றன என்று கூறப்படுவதை பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ செரி டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மறுத்துள்ளார்.
எனினும் மஇகாவும், மசீச.வும் இந்த மாநில தேர்தல்களில் போட்டியிடாததற்கு சொந்த காரணங்கள் இருக்கலாம் என்பதை அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட் ஒப்புக்கொண்டார். இருப்பினும்
வரும் ஜுலை 10 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பாரிசான் நேஷனல் உச்சமன்றக்கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்படும் என்று ஜாஹிட் தெரிவித்தார்.
வருகின்ற 16 ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் அதேவேளையில் இந்தியர்களின் மனங்களை வென்று எடுப்பதற்கு ஏதுவாக இந்த சட்டன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மஇகா முடிவு எடுத்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


