கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் தொடங்கிய அம்னோ பேராளர் மாநாடடின் திறப்பு விழாவில் தாம் கலந்து கொண்டதற்கான காரணத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.
2023 ஆம் ஆண்டிற்கான அம்னோ மாநாட்டின் தொடக்க விழாவில் தாம் கலந்து கொண்டதற்கு முக்கிய காரணம், மக்களுக்கு நன்மை அளிக்க வேண்டும், ஒற்றுமை அரசாங்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே அதன் தொடக்க விழாவில் தாம் கலந்து கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஆற்றிய தலைமையுரை தொடர்பாக நிருபர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான அன்வார் மேற்கண்டாவாறு கூறினார்.
25 ஆண்டுகளுக்கு பிறகு அம்னோ தளத்திற்கு திரும்பியிருப்பது குறித்து அன்வாரிடம் வினவப்பட்டது.
மாநாட்டில் கலந்து கொண்டது, நாட்டிற்கு தாம் ஆற்றி வரும் கடமைகளில் இதுவும் ஒன்றாகும். தனிப்பட்ட முறையில் தமக்கு ஒரு நூதன அனுபவமாகும். ஆனால், அது நாடு மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களை விட மேலானது அல்ல என்பதை அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து


