Aug 26, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வாரங்களுக்குப் பிறகு வேட்பாளர் அறிவிப்பு
அரசியல்

மூன்று வாரங்களுக்குப் பிறகு வேட்பாளர் அறிவிப்பு

Share:

விரைவில் நடைபெற விருக்கும் ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிப்பு, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, நடத்துவது மிகவும் பொருத்தமான நேரமாகும் என்று பினாங்கு மாநில முதல்வர் சௌ கொன் யியோவ் தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளும் அந்தந்தக் கட்சிகளின் பணிகளைச் செய்வதற்கு இந்தக் காலகட்டம் போதுமானதாக இருப்பதாக சௌ கொன் யியோவ் குறிப்பிட்டார்.
நேற்று புதன்கிழமை பினாங்கு மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி வேட்பாளர்களின் நியமனம் மற்றும் வாக்களிக்கும் நாள் மட்டுமே எஞ்சியுள்ளதாக சௌ கொன் யியோவ் தெரிவித்தார்.

Related News