Jun 28, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது
அரசியல்

அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

Share:

25 ஆயிரம் வெள்ளி லஞ்சம் வாங்கியதாக கூட்டரசு முன்னாள் அமைச்சர் ஒருவரின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி. ஆர்.எம் கைது செய்துள்ளது. குடியுரிமை விண்ணப்பம் ஒன்றை அங்கீகரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி ஆடவர் ஒருவரிடமிருந்து லஞ்சப் பணத்தை பெற்றதாக 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை எஸ்.பி. ஆர்.எம் அதிகாரிகள் வளைத்துப் பிடித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம்ஆண்டில் அமைச்சர் பதவி வகித்த ஒருவருக்கு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் சம்பந்தப்பட்ட நபர் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக எஸ்.பி. ஆர்.எம் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபரை வரும் வெள்ளிக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை எஸ்.பி. ஆர்.எம் பெற்றுள்ளது.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு