Oct 30, 2025
Thisaigal NewsYouTube
விசாரிக்கப்படும் சட்டம் பொருத்தமற்றது
அரசியல்

விசாரிக்கப்படும் சட்டம் பொருத்தமற்றது

Share:

ஷா ஆலம் ,ஆகஸ்ட் 21-

பெரிக்கத்தான் நசியனால் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின்தேசத்துரோகச் சட்டம் 1948-இன் கீழ் விசாரிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று பிரதமர் துறையின் சட்டப் பிரிவின் முன்னாள் துணை முகமது ஹனிபா மைதீன் கூறியுள்ளார்.

அண்மையில் நெக்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முஹ்யித்தீன் பேசிய கூற்று தவறு என்பதை தாம் மறுக்கவில்லை; ஆயினும், அவர் அந்த அடக்குமுறை சட்டப் பிரிவின் கீழ் விசாரிப்பது பொருத்தமற்றது என்று அவர் விவரித்தார்.

அதோடு, அந்த விவகாரத்தால், மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News