நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மந்திரி பெசார் பதவிக்கு ஜலாலுடின் அலியாஸ் பொருத்தமான வேட்பாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பெரிகாத்தான் நேசனல் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.
இரு கூட்டணிகளும் இணைந்து மாநில அரசாங்கத்தை அமைப்பதில் வெற்றி பெற்றால், மந்திரி பெசார் பதவிக்கு யாரை வேட்பாளராக நியமிப்பது என்பது குறித்து பாரிசான் நேசனல் மற்றும் பெரிகாத்தான் நேசனல் கட்சிகள் விவாதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆகஸ்ட் 1-ஆம் திகதி 36 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாரிசான் நேசனல் 25 இடங்களிலும் பெரிகாத்தான் நேசனல் 11 இடங்களிலும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடாமல் தனித்தனியாகக் களமிறங்குகின்றன.








