மஇகாவிலிருந்து விலகியுள்ள அதன் முன்னாள் உதவித் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன், எந்தவொரு புதிய கட்சியில் இணைவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேவேளையில் டான்ஸ்ரீ முகைதின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோ செரி ஹம்ஸா ஸைனுடினை சந்தித்ததை மேலவை உறுப்பினரான டத்தோ சிவராஜ் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், பெரிக்காத்தான் நேஷனலில் இணைவது குறித்து எந்தவொரு முடிவையும் தாம் எடுக்கவில்லை என்று டத்தோ சிவராஜ் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் தமது தலைமையில் ஒரு குழு, ஹம்ஸா ஸைனுடினை சந்தித்தது தொடர்பில் அவர், பெரிக்காத்தான் நேஷனலில் இணையப் போகிறார் என்று வெளியாகியுள்ள ஆருடம் தொடர்பில் டத்தோ சிவராஜ் கருத்துரைத்தார்.
ஹம்ஸா ஸைனுடினுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் அக்கூட்டணியில் இணைவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுவதை டத்தோ சிவராஜ் மறுத்தார். மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் பதவியிலிருந்து தாம் நீக்கப்பட்ட பின்னர் ஹம்ஸா ஸைனுடினை இரண்டு முறை சந்தித்ததாக டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


