எதிர்க்கட்சித் தலைவர் ஹம்ஸா ஜைனுதீன், வரும் மலாக்கா மாநிலத் தேர்தலில் தமது தலைமையிலான ஒரு புதிய அரசியல் இயக்கம் போட்டியிடும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் நிகழ்வில் பேசிய அவர், பெர்சத்து கட்சியின் முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களிடையே தமக்கு ஆதரவு பெருகி வருவதாகக் கூறினார்.
மலாக்காவின் எதிர்காலத்திற்குத் தெளிவான தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்கள் அவசியம் என்பதால், இந்தத் தேர்தலில் போட்டியிடுவது முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இந்தப் புதிய இயக்கம் குறித்த முழு விவரங்களையும் வெளியிட அவர் மறுத்துவிட்டார். புதிய கட்சியைப் பதிவு செய்வதை விட, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஏற்கனவே அங்கத்துவம் பெற்றுள்ள ஒரு கட்சியில் சேர்வதற்கே தாம் விரும்புவதாகவும் ஹம்ஸா ஜைனுதீன் தெரிவித்தார்.








