நாட்டின் 16-ஆவது பொதுத்தேர்தல் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் சொந்த உத்திகளுடன் களம் காணும் ஒரு 'திறந்தவெளிப் போட்டியாக' இருக்கும் என்று முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ ரஃபிஸி ராம்லி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தைக் கொண்ட அம்னோ, எப்போதும் பக்காத்தான் ஹரப்பானுக்கு இரண்டாவது இடத்தில் இருக்க விரும்பாது என்று அவர் கூறினார். தற்போதைய கூட்டணி தற்காலிகமானது மற்றும் நாட்டின் நிலைத்தன்மைக்கானது மட்டுமே தவிர, அது இறுதிவரையிலான அரசியல் திருமணம் அல்ல என்றும் அவர் விவரித்தார்.
பக்காத்தான் ஹராப்பான், பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் புதிய கட்சிகள் என அனைத்தும் தங்களின் அரசியல் வாழ்விற்காகத் தனி வழியைத் தேடும் என்றும், இந்த அரசியல் சூழலை எதிர்கொள்ளவே தாம் இணைந்துள்ள புதிய கட்சியான 'பெர்சாமா' உருவாக்கப்பட்டுள்ளது என்றும் ரஃபிஸி ராம்லி தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.








