வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மசீச ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது தொடர்பில் பாரிசான் நேஷனலின் பதிலுக்காக காத்திருப்பதாக அதன் மாநில தலைவர் இங் சொக் சின் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தனது பாரம்பரியத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு மசீச தயார் நிலையில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பாரிசான் நேஷனலின் பதிலுக்காக மசீச தற்போது காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தின் இந்த வரலாற்றுப்பூர்மான 15 சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தில் இரண்டாவது மிகப்பெரிய சமூகமாக விளங்கும் சீனர்களின் பங்கேற்பு இருக்க வேண்டும் என்று கட்சி விரும்புகிறது. வெற்றி, தோல்வி ஒரு புறம் இருந்தாலும் இத்தேர்தலில் சீன சமூகத்தின் பங்கேற்பை இழந்து விடக்கூடாது என்று மசீச கருதுகிறது. தற்போது ஐந்து தொகுதிகளில் போட்டியிடுவதே மசீசவின் நிலைப்பாடாகும் என்று இங் சொக் சின் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


