பாஸ் கட்சி, நோயையும், பேரிடரையும் பற்றிக்கொள்வதற்கு அதிக ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பாஸ் கட்சியின் இந்த செயல் மிகவும் ஆபத்தானதாகும் என்று பிரதமர் நினைவுறுத்தினார். தம்மைப் பொறுத்தவரையில் எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக ஆட்சியாளர்கள் விவகாரத்தை கையில் எடுக்குமானால் அக்கட்சிக்கு அறவே அனுதாபம் காட்டப்படாது என்று பிரதமர் நினைவுறுத்தினார்.
மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஷ்ரின் ஷா, கூறியதாக வெளியிடப்பட்ட ஒரு போலியான காணொளி தொடர்பில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள பாஸ் கட்சி குறித்து குறிப்பிடுகையில் பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நாட்டின் தலைவர் என்ற முறையில் தம்மை சீண்டிப்பார்ப்பதற்கு மக்களுக்கு உரிமையுண்டு. ஆனால், அந்த சீண்டல் வரம்புமீறியானால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுவே ஆட்சியாளர்கள் என்றால் எந்தவொரு தரப்பினருக்கும் அனுதாபம் காட்டப்படாது. ஒவ்வொரு குடிமகனும் ஆட்சியாளர்களுக்கும், நாட்டிற்கும் விசுவாசமாக இருப்பது அவசியமாகும். அதேவேளையில் ஆட்சியாளர்கள் விவகாரத்தை யாராவது கையில் எடுக்க முற்படுவார்களோனால் நோய்க்கும், பேரிடருக்கும் விலை கொடுப்பதைப் போல அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பிரதமர் அன்வார் எச்சரித்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


