திரெங்கானு மாநில சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லாத நிலையில் அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாதவர்களை எதிர்க்கட்சி சட்டம ன்ற உறுப்பினர்களாக நியமிக்கும்படி அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவர் கைரி ஜமாலுடீன் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் நடைமுறைக்கு அப்பாற்பட்ட நிலையில் தேர்வு செய்யப்படும், அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள், திரெங்கானு சட்டமன்றம் சீராக நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என்று கைரி குறிப்பிட்டார்.
தவிர திரெங்கானு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இல்லையென்றாலும் பாஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் ஒரு பொறுப்புள்ள நிர்வாகமாக செயல்படுகிறது என்பதை நிரூபிப்பதற்கு நியமன எதிர்க்கட்சி உறுப்பினர்களை சட்டமன்றத்தில் சேர்த்துக்கொள்வது அவசியமாகும் என்று கைரி வலியுறுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


